Thursday, May 31, 2007

லதா & தவளை

புதருக்குள் விழுந்துவிட்ட பந்தை எடுக்கச்சென்ற லதா ஒரு தவளை பொறியில் மாட்டியிருந்ததைக் கண்டாள். இவளைக்கண்டதும் தவளை சொன்னது, "பெண்ணே, என்னை இப்பொறியிலிருந்து விடுவித்தாயென்றால் உனக்கு மூன்று வரங்கள் தருவேன்." மகிழ்ந்துபோன லதா தவளையை விடுவித்ததும் அது சொன்னது, "ஆனால், நீ கேட்கும் வரங்கள் மூன்று மடங்காக உன் கணவனுக்கு வழங்கப்படும், சம்மதமா?"

வரம் கிடைத்தால்சரிதான் என்று சம்மதித்து முதல் வரத்தைக் கேட்டாள் லதா. "நான் உலகிலேயே மிகப்பெரிய அழகியாக வேண்டும்."
தவளை சொன்னது, "செய்கிறேன். ஆனால் உன் கணவன் உன்னைவிட மூன்று மடங்கு அழகில் சிறந்து விளங்குவான். மற்றப் பெண்கள் அவன் அழகில் மயங்குவர். சம்மதமா?"
"சம்மதம். எப்படியிருந்தாலும் நான் தானே உலகப்பேரழகி. அதனால் அவர் என்னை மட்டுமே விரும்புவார்", என்றாள் லதா. அதுபோலவே அவள் தவளையால் பேரழகியானாள். பெருமகிழ்ச்சியில் திளைத்த அவளிடம், "சரி உன் இரண்டாவது வரம் என்ன?", கேட்டது தவளை. "நான் உலகிலேயே பெரும் பணக்காரியாகவேண்டும்", என்றாள் லதா. தவளை அவளிடம் மறுபடியும், "உன் கணவன் உன்னைவிட மூன்றுமடங்கு பணக்காரனாவான், பரவாயில்லையா?" என்றது. லதா தவளையிடம், "அவர் என் கணவன் என்றபடியால் அவர் பணமும் என் பணம்தானே? ஆகவே சம்மதம்.", என்றாள். அவள் விருப்பப்படியே பெரும் பணக்காரியானாள்.

"மூன்றாவது வரம் என்ன?", கேட்டது தவளை. நன்றாக யோசித்துவிட்டுத் தன் கணவனின் கதையை முடிக்க நினைத்த லதா சொன்னாள், "எனக்கு மெல்லிய மாரடைப்பு வரவேண்டும்!"

No comments: