Thursday, May 31, 2007

சின்னச் சின்ன நகைச்சுவைகள்...

நள்ளிரவில் நகரத்திற்கு வந்த ஒருவன் தங்குவதற்கு அறை தேடி அலைந்தான். எங்கும் கிடைக்கவில்லை. ஒரு விடுதியிலிருந்து அவன் ஏமாற்றத்துடன் திரும்பும்போது அங்கிருந்த பொறுப்பாளர்,

இரவு உங்களுக்காக இரு படுக்கைகள் கொண்ட அறை. அதில் ஒரு படுக்கையில் பெண்மணி ஒருத்தி தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை எக்காரணம் கொண்டும் எழுப்ப மாட்டேன் என்றால் இன்னொரு படுக்கையில் நீங்கள் இன்றிரவு அமைதியாகத் தூங்கலாம் என்றார்.

அவனும் அந்த அறையில் தங்க ஒப்புக் கொண்டான்.

20 நிமிடம் கழித்துக் கீழே ஒடி வந்தான் அவன்.

சார், அந்தப் படுக்கையில் படுத்திருந்த பெண் இறந்து கிடக்கிறாள் என்று அலறினான் அவன்.

அவள் இறந்துவிட்டது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார் பொறுப்பாளர்.
________________________________

டீசன்டாக உடை அணிந்து ஒருவன் பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்து சாப்பிட்டு முடிக்கிறான். கையை கழுவுவதற்குப் பதில் டேபிள், நாற்காலியில் போடப்பட்ட துணியால் கைகளை துடைக்கிறான்.

முதலாளி : ஏம்ப்பா இதுக்கு முன்னாடி வேற நல்ல ஓட்டலுக்கு போனதே இல்லையா?

இவன் : ஓ. அசோகா ஓட்டலுக்கு போயிருக்கேனே.

முதலாளி : அங்கேயும் இப்படித்தான் செஞ்சியா?

இவன் : ஆமாம்.

முதலாளி : ஏன் அவங்க ஒண்ணுமே சொல்லலியா?

இவன் : என்ன அடிச்சு, உதச்சு அப்றம் சொன்னாங்க, "இந்த வேலையெல்லாம் அங்க வச்சுக்கன்னு", உங்க ஹோட்டல் பேரைச் சொன்னாங்க.
______________________________________

பனை மரத்தடியில் இரண்டு பேர் பேசிக் கொண்டார்கள்: ''மாட்டுக்கு வயசு கண்டுபிடிக்கிறது எப்படிண்ணே?''

''பல்லை வைச்சித்தாண்டா!''

''கோழிக்கு வயசைக் கண்டுபிடிக்கிறது எப்படிண்ணே?''

''அதுவும் பல்லை வைச்சித்தாண்டா!''

''கோழிக்கு ஏதுண்ணே பல்லு?''

''மடையா! கோழிப் பல்லைச் சொல்லலேடா, நம்ம பல்லைச் சொன்னேன். கறியை மெல்லும்போது கோழி இளசா, முத்தலான்னு தெரியுமே!''
____________________________________

No comments: